Sunday, March 9, 2014

சித்தரத்தை


சித்தரத்தை:

      மூலிகை வகைகளில் இஞ்சி வகையைச் சார்ந்தது.


      இந்தோனேசியா தாய்லாந்து  போன்ற நாடுகளில் உற்பத்தி ஆகின்றது.அவர்களின் உணவில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

      இது சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

      நெஞ்சு சளி, இருமல் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த நிவாரினி.

      இது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.



சித்தரத்தை கஷாயம் :

     ஒரு சிறிய துண்டினை எடுத்து சுத்தம் செய்து இடித்து 50 மி.லி  தண்ணீரில்
நன்றாக கொதிக்கவிடவும்.தண்ணீர் சிவந்த நிறமாக மாறியவுடன் இறக்கிவிடவும் .இதனை வடிகட்டி அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகவும் .

     தற்போது சித்தரத்தை நமக்கு ஏற்ற எளிய வகையில் பொடியாகவும்
கிடைக்கிறது.




சித்தரத்தை பொடி உபயோகிக்கும் முறை :
   
     தினமும் மூன்று வேலை தேனில் குழைத்து உணவுக்குப் பின் சாப்பிடவும் .
   
   

No comments:

Post a Comment