Tuesday, March 11, 2014

காடழித்தலின் தீமைகள் மற்றும் காடு வளர்ப்பின் நன்மைகள்

காடழித்தலின் தீமைகள் மற்றும் காடு வளர்ப்பின் நன்மைகள் 


        மனித வாழ்க்கையில் மரங்கள் முக்கியப்  பங்கு வகிக்கின்றன அது  நமக்கு உண்ண உணவு , சுவாசிக்க நல்ல  காற்று, நோயின்றி வாழ மூலிகைகள்   , இருப்பிடம் மற்றும் பல நன்மைகளை தருகின்றது. ஆனால் நாம் அதன் அருமையை உணராமல் வெட்டி விழ்த்துகிறோம. இத்தகைய செயல்களின் மூலம் நம்மை அறியாமல் காடுகளின் வளங்களை அழித்துக் கொண்டு வருகிறோம். இதனைத்தான் ஆங்கிலத்தில் Deforestration  என்கின்றனர்.



காடுகள் அழிவதற்கான காரணங்கள் :

  • அதிக நிலப்பரப்பு உள்ள விவசாய நிலங்களை அமைக்க.
  • சமையல் எரிபொருளுக்காக.
  • வீடு கட்டுவதற்காக.
  • வணிகம் செய்வதற்காக.
  • காகித உற்பத்திக்காக.
  • கலை மற்றும் கைவினை பொருட்களுக்காக.
  • நில சுரங்கம் அமைப்பதற்காக 


காடுகளை  அழிபதனால் ஏற்படும் விளைவுகள் :

1. மண்ணரிப்பு:
  • சூரிய கதிர்கள் நேரடியாக மண் மீது விழுவதனால் அதனுடைய ஈரப்பதம் குறைந்து, அதன் சத்துக்கள் வெளியேறி, நுண்ணுயிர்கள் அழிந்து மண்ணின் மக்கும்  தன்மை குறைந்துவிடுகின்றது.
  • இதனால் மழை பொழியும் பொழுது  மண்ணரிப்பு உண்டாகி  நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.   




2.   இனங்களின் இழப்பு :



     உலக அளவில் 70 சதவிகித தாவரங்கள் மற்றும் விலங்குகள் காடுகளில் வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதினால் அவற்றின் உரைவிடங்களும் அழிக்கப்படுகின்றன. ஆகையால் அவைகளின் இனமே அழியக்கூடிய நிலைமை உருவாகின்றது.

3. கார்பன்  வெளிப்படுத்துதல்:



      தாவரங்கள் கரிவளி வாயுவை உட்கொண்டு தனக்கு தேவையான உணவை தயார் செய்து நாம் உயிர் வாழத் தேவையான  பிராணவயுவை வெளியேற்றுகின்றன.காடுகளை அழிப்பதனால் பிராணவாயுவின் அளவு காற்றில் குறைகின்றது.

4.  நீரியல் சுழற்சி :
          
      நீரியல் சுழற்சி ஏற்பட மரங்கள் பெரிதும் உதவுகின்றன. நிலத்தில் இருக்கும் நீரை தனது வேர்களால் உரிந்து காற்றில் வெளிவிடுகின்றன (evaporation ). இத்தகைய செய்முறையால் மழைப்பொழிவு உண்டாகின்றது.





"விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது"
                                              -திருவள்ளுவர் 
பொருள் :

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
எனவே 
மரம் வளரப்போம்
மழை பெருவோம் 
மனித உயிரைக் காப்போம்.

காடுகள் அழிவதைத் தடுக்கும் வழிகள்:

1. மரக்கன்றுகளை நடுதல்:
        
              மரக்கன்றுகளை நடுவதினால்  காற்றிலுள்ள கார்பனின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது .



2. மறுசுழற்சிப்  பொருட்களை வாங்குதல்:

         மறுசுழற்சிப்  பொருட்களை உபயோகிப்பதினால் மூலப்பொருட்களின்  தேவையைக் குறைக்கலாம்.

         மறுசுழற்சிப்  பொருட்களில் சில 


                உலோகம்             
பிளாஸ்டிக் 

quazi-design-recycled-magazine-jewelry-6-537x365

காகிதம் 


கண்ணாடி 
3. விழிப்புணர்வு:


Efforts are on to raise awareness among Dalit and tribal people -mostly women - of Kaudikasa to know and cliam their rights - Stella Paul | Panos London


             மக்களிடையே காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தின் மூலம், காடுகள் அழிவதைத் தடுத்து சுற்றுச்சுழலை மேம்படுத்தலாம்  




















16 comments: