காடழித்தலின் தீமைகள் மற்றும் காடு வளர்ப்பின் நன்மைகள்
மனித வாழ்க்கையில் மரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன அது நமக்கு உண்ண உணவு , சுவாசிக்க நல்ல காற்று, நோயின்றி வாழ மூலிகைகள் , இருப்பிடம் மற்றும் பல நன்மைகளை தருகின்றது. ஆனால் நாம் அதன் அருமையை உணராமல் வெட்டி விழ்த்துகிறோம. இத்தகைய செயல்களின் மூலம் நம்மை அறியாமல் காடுகளின் வளங்களை அழித்துக் கொண்டு வருகிறோம். இதனைத்தான் ஆங்கிலத்தில் Deforestration என்கின்றனர்.
- அதிக நிலப்பரப்பு உள்ள விவசாய நிலங்களை அமைக்க.
- சமையல் எரிபொருளுக்காக.
- வீடு கட்டுவதற்காக.
- வணிகம் செய்வதற்காக.
- காகித உற்பத்திக்காக.
- கலை மற்றும் கைவினை பொருட்களுக்காக.
- நில சுரங்கம் அமைப்பதற்காக
காடுகளை அழிபதனால் ஏற்படும் விளைவுகள் :
1. மண்ணரிப்பு:
- சூரிய கதிர்கள் நேரடியாக மண் மீது விழுவதனால் அதனுடைய ஈரப்பதம் குறைந்து, அதன் சத்துக்கள் வெளியேறி, நுண்ணுயிர்கள் அழிந்து மண்ணின் மக்கும் தன்மை குறைந்துவிடுகின்றது.
- இதனால் மழை பொழியும் பொழுது மண்ணரிப்பு உண்டாகி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
2. இனங்களின் இழப்பு :
உலக அளவில் 70 சதவிகித தாவரங்கள் மற்றும் விலங்குகள் காடுகளில் வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதினால் அவற்றின் உரைவிடங்களும் அழிக்கப்படுகின்றன. ஆகையால் அவைகளின் இனமே அழியக்கூடிய நிலைமை உருவாகின்றது.
3. கார்பன் வெளிப்படுத்துதல்:
தாவரங்கள் கரிவளி வாயுவை உட்கொண்டு தனக்கு தேவையான உணவை தயார் செய்து நாம் உயிர் வாழத் தேவையான பிராணவயுவை வெளியேற்றுகின்றன.காடுகளை அழிப்பதனால் பிராணவாயுவின் அளவு காற்றில் குறைகின்றது.
4. நீரியல் சுழற்சி :
நீரியல் சுழற்சி ஏற்பட மரங்கள் பெரிதும் உதவுகின்றன. நிலத்தில் இருக்கும் நீரை தனது வேர்களால் உரிந்து காற்றில் வெளிவிடுகின்றன (evaporation ). இத்தகைய செய்முறையால் மழைப்பொழிவு உண்டாகின்றது.
"விசும்பின்
துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல்
தலைகாண்பு அரிது"
-திருவள்ளுவர்
பொருள் :
விண்ணிலிருந்து
மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
எனவே
மரம் வளரப்போம்
மழை பெருவோம்
மனித உயிரைக் காப்போம்.
காடுகள் அழிவதைத் தடுக்கும் வழிகள்:
1. மரக்கன்றுகளை நடுதல்:
மரக்கன்றுகளை நடுவதினால் காற்றிலுள்ள கார்பனின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது .
2. மறுசுழற்சிப் பொருட்களை வாங்குதல்:
மறுசுழற்சிப் பொருட்களை உபயோகிப்பதினால் மூலப்பொருட்களின் தேவையைக் குறைக்கலாம்.
மறுசுழற்சிப் பொருட்களில் சில
உலோகம்
பிளாஸ்டிக்
காகிதம்
கண்ணாடி
3. விழிப்புணர்வு:
மக்களிடையே காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தின் மூலம், காடுகள் அழிவதைத் தடுத்து சுற்றுச்சுழலை மேம்படுத்தலாம்